சென்னை: அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பி.இ., படிப்பில் சேர, அக். 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான (மாலை நேர வகுப்புகள்) விண்ணப்பங்கள், தேர்வு மையத்தில் வழங்கப்படுகின்றன.
பொதுப்பிரிவு மாணவர்கள் 500 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., மாணவர்கள் 250 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 19ம் தேதி மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர விரும்புபவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமா முடித்திருக்க வேண்டும். இப்படிப்பு மூன்றரை ஆண்டுகள் (ஏழு செமஸ்டர்கள்) வழங்கப்படும்.
வார நாட்களில் மாலை 6:15 மணி முதல் 9:15 மணி வரை வகுப்புகள் நடைபெறும். பேராசிரியர்களின் முடிவுக்கு ஏற்ப, ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடைபெறும்.
பல்கலையிலிருந்து 90 கி.மீ., தொலைவுக்குள் பணிபுரிபவர்கள் மட்டுமே, இந்த பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவர்.
வயது உச்சவரம்பு கிடையாது.
டிப்ளமா தேர்வு மதிப்பெண் 75 சதவீதம், பணி அனுபவம் 25 சதவீத அடிப்படையில் தகுதி கணக்கிடப்பட்டு, ‘மெரிட்’ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.annauniv.edu/ptbe2010 ) தெரிந்து கொள்ளலாம்.
Labels:
Education news.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பி.இ., அட்மிஷன்
Posted by
Campus Front Tamilnadu
Thursday, October 14, 2010
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Popular Posts
-
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் மற்றும் ஆக்சஸ்(Access) இந்தியா இணைந்து, மாணவர்களின் இலக்கு எப்படி இருக்க வேண்டும் , மேற்ப...
Career Guidance Book

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "நாமும் சாதிக்கலாம்" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
0 comments :
Post a Comment