Labels:

மேற்படிப்பு வழிகாட்டி முகாம்


கேம்பஸ் ஃப்ரண்;ட் ஆஃப் இந்தியா நடத்திய மேற்படிப்பு வழிகாட்டி முகாம் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை கம்பம் மு.மு.பட்டி ரோட்டில் உள்ள கோகுலம் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்ப்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத்தலைவர் ஆ.தமீமுல் அன்சாரி, அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கம்பம் நகரத் தலைவர் ஜனாப் மு.சிக்கந்தர் ஜெய்லானி மற்றும் தொழிலதிபர் குதுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் Z.முஹம்மது தம்பி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சையது அபுதாஹீர் அவர்கள் மேற்படிப்பு வழிகாட்டுதல் வழங்கினார்கள். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றியுரை ஆற்ற இந்த முகாம் இனிதே நிறைவடைந்தது. மேலும் இந்த முகாமில் மேற்படிப்பு வழிகாட்டி புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள்,பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment