Labels:

மோடியின் தமிழக வருகையை கண்டித்து பல்வேறு தமிழக மாணவ அமைப்பினரின் போராட்டம்,

நரேந்திர மோடியின் தமிழக வருகையை கண்டித்து பல்வேறு தமிழக மாணவ அமைப்பினர் போராட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் சார்பாக கிண்டி பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. 

இது தொடர்பாக கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் சாகுல் சஹீத் ஊடகங்களுக்கு கூறியதாவது “தொடர்ந்து தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை புறக்கணித்தும் தமிழ் மக்களுக்கும், தமிழர் தலைவர்கள் மற்றும் சிறுபாண்மையினருக்கு எதிராகவும் பேசி வரும் பாரதிய ஜனதா கட்சியின் தவறான கொள்கைகளை மக்கள் முன் பிரட்சாரம் செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக குஜராத் இனப்படுகொலைகளுக்கு காரணமான நரேந்திர மோடியின் சென்னை வருகையை மாணவர்கள் ஆகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் இன்று முதல் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் ஏழு தொகுதிகளிலும் அடுத்த 12 நாட்களுக்கு எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார் . இதில்
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா
இனப்படுகொலைகளுக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பு
தமிழ்நாடு மாணவர் இயக்கம்
முற்போக்கு மாணவர் முன்னணி
தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு

ஆகிய மாணவ இயக்கங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு சாலை மறியல் மற்றும் நரேந்திர மோடிக்கு எதிரான கோசம் எழுப்பினர் இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்











0 comments :

Post a Comment