Labels:

மாணவ இயக்கங்களின் தலைவர்கள் கலந்துரையாடல்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கினை வலியுறுத்தி தேசம் முழுவதும் கல்வி சார்ந்த பல்வேறு செயல்களை சிறப்பாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூன் 1 முதல் ஜூன் 20 வரை வணிகமயமாகும் கல்வியை எதிர்த்து பல கட்ட தொடர் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பல்வேறு மாணவ இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை அழைத்து 14/06/2015 அன்று மாலை 5 மணியளவில் சென்னை மண்ணடியில் உள்ள இந்தியன் பேலஸில் வணிக மயமாகும் கல்வியை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக தோழர் சுபுஹதுல்லாஹ், தாஜுதீன்,
பாலசந்தர் மாணவர் இயக்கம் சார்பாக பன்னீர்,
TYSF சார்பாக பிரபாகரன், TSM சார்பாக அசார்,
மற்றும் SIO, MSF, SI, உள்ளிட்ட மாணவ அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..






0 comments :

Post a Comment