கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டம் 26.07.2013
அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
மாபெரும் கல்விக்கொல்லைகெதிரான மாணவர் போராட்த்தை நடத்தியது.
மதுரை ஃ பாத்திமா மைகேல் கல்லூரி, மாணவர்களிடம் நுழைவுக்
கட்டணம் என்ற பெயரில் கல்விக் கொள்ளையில் இறங்கியுள்ளது .மேலும்
மாணவர்களுக்கு வாகன வசதிகளை செய்து தராமலும், மாணவர்களை தரக்குறைவாகவும் நடத்தியும் உள்ளனர் .
இம்மாதிரி மாணவர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் போராட்த்தை நடத்தியது. இப்போராட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ன் மாவாட்ட தலைவர் தோழர்
சுல்தான் தலைமை தாங்கினார் . மாநில பொருளாளர் தோழர் பக்ருதீன் , மாவட்ட செயலாளர் தோழர் இப்ராஹிம் மற்றும் கல்லூரி
மாணவர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர் . இப்போராட்டத்தின் இறுதியில் மாவட்ட துணை
ஆட்சியாளரை சந்தித்து பிரச்சினை சம்பந்தமாக மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு
கேட்டுக்கொண்டனர்
0 comments :
Post a Comment