Labels:

கல்விக்கொள்ளையை தடுக்க மாணவர்களின் போராட்டம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டம் 26.07.2013 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கல்விக்கொல்லைகெதிரான  மாணவர் போராட்த்தை நடத்தியது.
  மதுரை ஃ பாத்திமா மைகேல் கல்லூரி,  மாணவர்களிடம் நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் கல்விக் கொள்ளையில்  இறங்கியுள்ளது .மேலும் மாணவர்களுக்கு வாகன வசதிகளை செய்து தராமலும், மாணவர்களை தரக்குறைவாகவும் நடத்தியும் உள்ளனர் . இம்மாதிரி மாணவர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து  கேம்பஸ் ஃப்ரண்ட் போராட்த்தை நடத்தியது. இப்போராட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ன்  மாவாட்ட தலைவர் தோழர் சுல்தான் தலைமை தாங்கினார் . மாநில பொருளாளர் தோழர் பக்ருதீன் , மாவட்ட செயலாளர் தோழர் இப்ராஹிம்  மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர் . இப்போராட்டத்தின் இறுதியில் மாவட்ட துணை ஆட்சியாளரை சந்தித்து பிரச்சினை சம்பந்தமாக மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர் 



0 comments :

Post a Comment