Labels:

FYUP - ஐ திரும்ப பெறு-


FYUP - ஐ திரும்ப பெறு- கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி பல்கலைக்கழகம் புதிதாக கொண்டு வந்துள்ள FYUP ( Four Year Undergraduate Program ) என்ற நான்கு வருட இளங்கலை பட்ட மேற்படிப்பு பாடத்திட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நான்கு வருடம் படிக்கக்கூடிய மாணவர்கள் விரும்பினால் இரண்டு வருடத்தில் இடை நிறுத்தம் செய்து கொள்ளலாம், இம்மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும் என்ற குறிப்பிட்ட சில வறம்புகள் மூலம் இப்பாடத்திட்டம் வறயறுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமப்பற மாணவர்களும், அடித்தட்டு மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பாடத்திட்டத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இதனை உடனடியாக திரும்பப்பெறக்கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் கண்டன போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் தமிழ்நாடு சார்பில் தமிழகத்தின் பிரபலமான ஐந்து பல்கலைக்கழகத்தில் இன்று (21-06-2013) வாயிற்முனை கூட்டங்களின் மூலம் கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக மாணவர்களின் கண்டனத்தையும் பதிவு செய்தது, இன்று காலை 10.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ் (சென்னை பழ்கலைக்கழகம்) வளாகத்தில் கையெழுத்து இயக்கம் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலாய்மையில் நடைபெற்றது இதில் மாணவர்களும், மாணவிகளும் , ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.. 




0 comments :

Post a Comment