மாணவ மாணவிகளுக்கான கருத்தரங்கம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 20 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது அதில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் சம்பட்டிபுரம் பகுதியில் மதுரை கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது அதில் மதுரை மாவட்ட தலைவர் சகோதரர் சுல்தான் தலைமை தாங்கினார், துவக்கஉரை மாநில குழு உறுப்பினர் சகோதரி ஃபரிதா அவர்கள் ஆற்றினார், சிறப்புரை கேம்பஸ் ஃப்ரண்டின் தமிழ் மாநில பொது செயலாளர் சகோதரர் ஷஹீத் மற்றும் மாநில மாநில குழு உறுப்பினர் சகோதரி வாசித்தா அவர்களும் உரையாற்றினார்கள், இந்நிகழ்ச்சியினை மாவட்ட குழு உறுப்பினர் சகோதரர் ஆஷிக் மிக சிறப்பாக ஒருங்கிணைத்தார்.மேலும் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகள் கேம்பஸ் ஃப்ரண்ட் ல் இணைத்தனர்.

                            

0 comments :

Post a Comment