Labels:

வெள்ள நிவாரண நிதி வசூல்




சென்னை மற்றும் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக பல உதவிகள் செய்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள “ டாக்டர்.ஜாகிர் உசேன் கலை கல்லூரி”யில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வசூல் செய்யப்பட்டது.
இதன் வசூல் செய்யப் பட்ட தொகையை (15.12.15) அன்று கேம்பஸ் ப்ரண்டிடம் ஒப்படைத்தனர். இதை கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் சித்தீக், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி, முன்னாள் முதல்வர் நெளஷத் வழங்க கேம்பஸ் ப்ரண்ட் மாநில துணைத் தலைவர் பக்ருதீன் பெற்றுக் கொண்டார்.இதில் இராமநாதபுரம்  மாவட்ட தலைவர் அல் அசீர்,மாவட்ட குழு உறுப்பினர் ஷேக் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
 



0 comments :

Post a Comment